தலைப்புச்செய்தி
March 8th, 2010

 
தேசிய நல்லிணக்க அமைச்சரும் சுதந்திரக்கட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டுமாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு விஜயம்…..

 
நடைபெறவிருக்கும் 2010 பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான க.சத்தியவரதன் குணசேகரம் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தேசிய நல்லிணக்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தார். இதன் ஓர் அங்கமாக நேற்று முன் தினம் 06.03.2010 சனிக்கிழமை வாகரை பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததோடு வாகரை பிரதேச போக்குகுவரத்து அதிகாரியுடன் கலந்துரையாடி அங்கு நிலவும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதன் போது கட்டுமுறிவு பிரதேசத்திற்கான போக்குவரத்துச் சேவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளாகளான சத்தியவரதன் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Filled Under: செய்திகள்
Ammaan

தொடர்புகளுக்கு...

கொழும்பு காரியாலயம் 53/1, புத்தாகமுவ வீதி, வெலிகடை, இராஜகிரிய.
தொலைபேசி : 0112874033 தொலைநகல் : 0112874033
மட்டக்களப்பு காரியாலயம்
இல 04, நேச ஒழுங்கை, மட்டக்களப்பு. 065 2223706 - 0773986465


செய்திகள்

மாதர் அமைப்புக்களின் விருத்திக்கும் விதவைகளின் மறுவாழ்விற்கும் எதிர்காலத்தில் உதவுவேன். கருணா அம்மான் மாமாங்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

03-06-2010 ம் திகதியன்று காலை 11.30 மணியளவில் மாமாங்க் பகுதியில் மாநகர சபை உறுப்பினர் மு.தவராஜா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குரிய தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைசசர் திரு.வி.முரளிதரன்(கருணா அம்மான்) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டது. மாமாங்க பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகத்திற்கும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் மீன்பிடியை ஜீபனோபாயமாக கொண்டவர்களுக்கு விசேட கடன் உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வண.பிதா அருமைராசா அவர்கள் வேண்டிகொண்டதற்கு இணங்க கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சீமேந்து பைகளையும் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட மககளிடம் வெறிறிலை சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே பாராளுமற்;றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கதமுடியும் எனவும் கேட்டுகொண்டதுடன் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

செய்திகள்

ஆரயம்பதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் தேர்தல் பிரச்சார ஆலுவலகம்  திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில்; தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் உபதலைவருமான திரு.வி.முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் 06.03.2010 அன்று காலை 9.30 மணிக்கு ஆரயம்மபதி  பகுதியில் தேர்தல் பிரச்சார காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தார்.  இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் போட்டியிடும்  வேட்பாளர்களான வி.குணசேகரம், க.சத்தியவரதன், முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினரும் தற்போதைய  சுதந்திர கட்சியின் வேட்பாளருமான செல்வி.க.தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ்; அலுவலகம்  திறக்கப்பட்டதன் நோக்கம்
• மக்களின் வேலைப்பளுவை இலகுபடுத்தல்.
• பிரட்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணுதல்;.
• ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் பிரசார நடவடிக்கையை துரிதப்படுத்தல்.
• ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின்  தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பினை துரிதப்படுத்தல்.

செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கிளை காரியாலயம் இன்று 06.03.2010              ஆரையம்பதியில் வைபவ ரிதீயாக திறப்பு………

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கிளை காரியாலயம் இன்று 06.03.2010 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும்இ தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் ஆரையம்பதியில் வைபவரிதீயாக திறந்து வைக்கப்பட்டது. (more…)

செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  விளையாட்டு கழகங்களுக்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று விளையாட்டு பொருட்களை அன்பளிப்பு செய்தார். (more…)

செய்திகள்

அமைச்சர் கருணா அம்மான் வாகரையில் பேச்சு….

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய ஆதரவு வழங்காத போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுடன் இன்னும் பெரும் ஆதரவினை கொண்டுள்ளார். (more…)

செய்திகள்

ஆலயத்தின் கட்டட பணிக்காக உதவி வழங்கல்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் கிரானில்வைத்து கல்குடா தொகுதியில் பயங்கரவாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு, ஆலய புனருத்தான கட்டட பணிக்காக ஒரு தொகுதி சீமெந்து பைகள் அந்தந்த ஆலய பரிபாலண சபையாரிடம் 03.03.2010 அன்று பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் அமைச்சரும், அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்குடா வேட்பாளருமான சத்திய வரதனும் கட்சி அதரவாளர்களும், ஆலய நிர்வாக உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.

·         உதவி வழங்கப்பட்ட ஆலயங்கள் சில வருமாறு

1.   சித்தி விநாயகர் ஆலயம்       வேம்பு

2.   மகா காளியம்மாள் ஆலயம்     கிரான்

3.   மகா விஜ்ணு ஆலயம்         வந்தாறு மூலை

4.   பிள்ளையார் கோவில்          கிண்ணியடிஇ வாழைச்சேனை

5.   மாணிக்கப்பிள்ளையார்         சந்திவெளி

6.   முருகன் ஆலயம்             முறக்கொட்டாஞ்சேனை.

செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்.

·       அமிர்அலி              01

·       அலிஸாஷிர் மௌலானா   02

·       ஹிஸ்புல்லா            03

·       தங்கேஸ்வரி            04

·       சத்தியவரதன்           05

·       குணரெட்ணம்           06

·       ரமேஸ் கலைச்செல்வன்    07

·       கணேசமூர்த்தி          08

செய்திகள்

இன்று (04.03.2010) வாகரை பிரதேசத்தில்…… ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் 04.03.2010 இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணா அம்மான்) அவர்களும் மற்றும் கல்குடா தொகுதி வேட்பாளர் சத்தியவரதனும், மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர் தங்கேஸ்வரியும், பட்டிருப்பு தொகுதி வேட்பாளர் குணரெட்ணம் அவர்களும் பயங்கரவாத யுத்தப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாகரை,  மாங்கேணி, கதிரவெளி போன்ற பிரதேசத்தில் இன்று தங்களின் பிரச்சார கூட்டங்களை நடாத்திவருகிறனர். அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இதில் கட்சி அமைப்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதோடு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள்; வர்த்தக சங்கங்கள் என்பன கலந்து கொண்டனர்.

செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் 03.03.2010 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணா அம்மான்) அவர்கள்; தங்களின் சொந்த இடமான கிரான் மகா காளியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாட்டுடன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதில் கல்குடா வேட்பாளரான சத்திய வரதன் உள்ளிட்ட பல கட்சி ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் பொது மக்களும் கலந்து கொண்டணர். அதனைத் தொடர்ந்து அன்று இரவு இசைநிகழ்ச்சியுடனும் பிரச்சாரக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.

செய்திகள்

Webவணக்கம் இணைய அன்பு நெஞ்சங்களே!!!
இப்போது காலம் தலைகீழாகிவிட்டது, இப்போதும் ஆயதப்போராட்டத்தின் அழுத்தங்களை வைத்து தமிழர்களின் அழிவிற்கு வழிதேடாமல் நல்லரசியல் மூலம் பாதைகளை அமைப்போம் என்றால் அதற்கு அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்களை தற்போது இணையங்கள் வெளியிடுகின்றன. (more…)

செய்திகள்

புலத்தில் நடப்பது நாடுகடந்த அரசா, நாடு கடத்தப்பட்ட அரசா???

புலிகளின் பாரிய பின்னடைவிற்குப்பின்னர், புலிகளின் சார்பில் புலத்தில் தம்மையும் தம்குடும்பத்தையும் பலப்படுத்தி வண்டியோட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு வருகின்ற தேர்தல் முடிவிற்குப்பின்னர் பெரிய ஆப்பு விளப்போகின்றது. (more…)

செய்திகள்

புலத்தில் சில இணையங்கள் மக்கள் மத்தியில் தகாத விடயங்களையே செய்திகளாக வெளியிட்டு வருகின்றன… அதாவது, பின்வரும் செய்தியில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதனை தற்போது மக்கள் ஒப்பிட்டுப்பார்த்து செய்திகளை இனங்காணவேண்டும். இதன்மூலம் மட்டுமே உண்மையான ஊடகங்களை மக்கள் வளர்த்தெடுக்க வேண்டும். (more…)

செய்திகள்

president_j80காலங்கடந்தும் ஞானம் பிறந்த கதையாக தமிழர்களுக்கு இன்னும் புரியவில்லையா விடுதலையின் பாதைகள்! எந்தவழி மக்களுக்கு நிம்மதியான வாழ்வைக்கொடுக்கும் என்று இன்னுமா புரியவில்லை… இப்போது போர்முடிந்த பின்னர் தமிழர்களின் இழப்பினைக்கணக்கிட்டுப்பாருங்கள்… தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்… (more…)

25 February 2010

செய்திகள்

புலிகளிடம் இருந்து ஏராளம் ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டது, 20ஆயிரத்திற்கும் மேலான புலிகள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்தில் அமைப்புக்களையும், மதத்தலைவர்களையும், அரசஊழியர்களையும், மக்களையும் ஆயுதமுனையில் வழிநடத்தினர். அப்படி இருக்கும் போது புலிகள் 30 வருட போராட்டத்தை ஆறுமாதத்திற்குள் தோற்றதற்குக்காரணம் என்ன? (more…)

9 February 2010

செய்திகள்

தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார். (more…)

7 February 2010