தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டு. மாநகர சபை தேர்தலில் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களை மட்டக்களப்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட செயலகத்தில் வைத்து நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இவ் இணக்கத்தை மேயர் சீவகீர்த்தா தெரிவித்துள்ளார். இவருடன் சேர்ந்து மாநகர சபை உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் [...]
காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடக்கு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் அவர்கள் தனது இறுதி அஞ்சலியை தெரிவித்துள்ளார். அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் தனது அஞ்சலி அறிக்கையில், தழிம் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கனகசபை பத்மநாதன் என்பவர் உண்மையாக தமிழ் மக்களுக்காக உழைத்தவர். நான் அவருடன் பழகியவன் என்ற வகையில் கூறுகின்றேன் அவர் தமிழ் மக்களுக்காக சேவை செய்வதில் சுறுசுறுப்பாக செயற்பட்டவர். அவரை நோக்கி [...]
ஈவு இரக்கமற்ற, வரட்டு கௌரவம் பிடித்த வேலுப்பிள்ளையின்ட மகன் பிரபாகரனிடம் எத்தனை முறை மன்றாட்டாக அன்றைய ஈடு இணையற்ற “தளபதி” கருணா அம்மான் அவர்கள் யதார்த்தத்தை துல்லியமாக விளக்கியிருப்பார். இன்று(வன்னி முழுமையாக படையினர் வசம் விழுந்ததை) நடந்து முடிந்ததை அன்று தீர்க்க தரிசனமாக எதிர்வுகூறிய அம்மான் அவர்களின் எந்தவிதமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவற்றில் ஏதாவது ஒன்றை தமிழர்களின் விடிவிற்காக கருத்திலெடுக்கவுமில்லை. கருணா அம்மான் அவர்கள் துரோகி என்று மார்தட்டிக் கொண்டவர்களின் முகத்திரைகள் கிளிக்கப்பட்டு, வெறும் [...]
கடந்த கால்நூற்றாண்டிற்கும் மேலாக அரசியலில் அனாதைகளாக்கப்பட்ட தமிழினத்தின் ஏக பிரதிநிதியாக தனது அரசியல் நீரோட்டத்தினை சற்று வித்தியாசமான முறையில் நகர்த்திக்கொண்டிருப்பவர் கௌரவ கருணா அம்மான் அவர்கள். கிழக்கின் இனங்களுக்கிடையிலான பாரிய ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும், மற்றும் அபிவிருத்திக்கும் தன்னை அர்ப்பணித்து, நடைமுறைக்குச்சாத்தியமான, ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார் கௌரவ கருணா அம்மான். தமிழினத்தின் விமோசனத்திற்காக, அவர்களின் பாதுகாவலராக கிழக்கில் குறிப்பிடும் படியாக எவரும் இல்லாத துரதிஸ்டவசமான நிலையில், கருணா அம்மான் அவர்களின் துணிச்சலான, விவேகமான, நிபுணத்துவமான காய் நகர்த்தல்கள் கிழக்கு [...]



