எமது பிரதேசங்களின் இளைஞர்இ யுவதிகளின் நலன்களை மேம்படுத்தும் பொருட்டு சுய தொழிலினையும்இ பட்டப்படிப்பினையும் மஞ்சந்தொடுவா தொழில் நுட்பக்கல்லூரி வழங்கி வருகின்றது. இதன் விளைவாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தொழில் நுட்பக் கல்லூரிக்கு விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தொழில் நுட்பக் கல்லூரிக்கு பல வசதிகளை பெற்றுத்தருவதாக கூறியதோடுஇ விரிவுரையாளர்களை நியமிப்பதுஇ இதர வகுப்புக்களை நடாத்துவதுஇ தொழில் நுட்பக் கல்லூரிக்கு மைதானங்களைப் பெற்றுத்தருவதுஇ மஞ்சந்தொடுவா தொழில் நூட்பக் கல்லூரியை தரம் உயர்த்துவது போன்ற [...]
தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு சென்ற அவர் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ். பாக்கியராஜா உள்ளிட்ட பல விரிவுரையாளர் கொண்ட குழுவினை அமைச்சர் சந்தித்தார். அதில் தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பான விடங்கள் ஆராயப்பட்டது. இதன்போது தேசிய கல்வியியல் கல்லூரியின் குறைபாடுகள் கேட்டறிந்த அமைச்சர் இதனை நிறைவு செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். தொடர்ந்து இசை இ நடனம் [...]
இலங்கை அரசியலும், தமிழர்களின் உரிமைகளும்…
கடந்த சில மாதங்களின் முன்பு இலங்கைத்தீவில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கைத்தூதராலயத்தால் இத்தாலி றோம் நகரில் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் குறிப்பிட்ட அமைப்பாலும் சில கலைநிகழ்ச்சிகளும் இலங்கை அதிபர் உயர்திரு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான விண்ணப்ப மனுவும் கையளிக்கப்பட்டது. அவ்வேளையில் இலங்கைத் தூதராலயத்தின் தூதுவர் அவர்கள் தனது உரையில் எடுத்துக்காட்டிய ஒருவிடயத்தை இங்கு மீட்டுக்கொள்ள விரும்புகின்றேன். சிங்கள மக்களுக்காக இலங்கையின் வரலாறு 2500வருடங்கள் ஆனால் தமிழர்களின் இலங்கை [...]
அமைச்சர் கருணா அம்மான் மீண்டும் அதிகாரமுடைய அமைச்சில் அங்கம் வகிக்கத்தான் போகின்றார்….
புலத்தில் பல பினாமிகள் புறம்பேசி தமிழர்களுக்குக்கிடைக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களை உதார்சீனம் செய்து வருகின்றனர். தகாத விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அது வருகின்ற தேர்தலுடன் தவிடுபொடியாகவிடப்போகின்றது. அப்போதுமட்டுமல்ல, இனிமேல் அனைத்திலும் தமிழர்களுக்கு அரசியல் மூலம் புதிய பரிமானங்கள் இடம்பெறவிருக்கின்னதனை அனைத்து தமிழர்களும் காணத்தான் போகின்றார்கள்.
கடந்த காலங்களில் அமைச்சரும் முன்னாள் புலிகளின் முக்கிய தளபதியுமான கருணா அம்மானை பல இணையத்தளங்கள் வசைபாடிவந்ததை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் தற்போது அவ்வாறான இணையத்தளங்களில் பல செயலிழந்து போயிருக்கின்ற நிலையில், இன்னும் ஒருசில அவ்வப்போது விழித்துக்கொள்வதனைப்போல் செயற்பட்டாலும் கருணா அம்மானை எவ்வாறு வசைபாடுவது என்று தெரியாமல், அவர் சொல்லும் வார்த்தைகளை பொறுக்கி எடுத்து அதை நக்கலாகவும் கிண்டலாகவும் ஏழனம் செய்கின்ற வகையிலிருந்து இப்போது மெதுவாக மாறி தகிட தகிட தாளம் போட முனைவதும் புரிகின்றது.



